பிழிந்து காயப்போட்ட ஞாயிற்றுக்கிழமை தினமொன்றில்
துவைத்து எடுத்தாள் அவளின் ஐநூத்திஒன் பேச்சால்
கள்ளச் சிரிப்பழகால்
நெஞ்சு சிறிது காமக்கறை படிய வைத்து,
அவளின் சர்ப் சிரிப்பால்
சலவை செய்தாள்,
அடித்துக் கும்மியதில்
அடிமையாக்கும் வன்ம நுரைகளை விழுங்கின
வழிந்தோடிய சோப்புத்தண்ணீர்,
அலசியெடுத்து உதறியதில்
தெறித்து விழுந்தன சில வக்கிரங்கள்,
அவளின் அயனிங் மனதால்
சடச்சடவென்று இருக்கிறது
எம் காதல்,
எம் ஞாபகக்குளத்தில்
அவள் விட்டெறிந்தது
கூழாங்கற்களா?
கோரைப் புற்களா?
விழுகின்ற ஒவ்வொரு நிமிடப் பொழுதும்
நினைவு வளையங்கள்
விரிவடைந்துகொன்டே போகின்றன