Sunday, 21 July 2013

இம்சை செய்


நீர் தூங்கும் பூமெத்தையான
ஈரக்காலைப் பொழுதில்,
பிரிவின் வலியை சொன்னாலும்
புரியாத குறுந்தோகை மயிலாட்டம்
குடுகுடுக்கிறாய் அன்பே,
நளினமான புன்னகையோடு கூடிய
பேச்சை என்னிடம் பேச எப்படியடி
மன்மதக்கணை தொடுக்க கற்றுக்கொண்டாய்,
உனக்குபிடித்த நாய்க்குட்டிகள்,கன்றுக் குட்டிகள்
கக்கத்தில் தூக்கிதொளுவத்தில் விட்ட தைப்போல
மகிழ்ச்சியில் துள்ளிக் கொள்கிறது
அவ்வப்போது உன்னோடு உரையாடும் பொழுதின் மனம்,
அம்மாவிடம் என்ன வசியம் செய்தாயடி பெண்ணே
அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிட்டாள் உன்நலம் பற்றி
உன் வேலைப் பளுவால் பேசாக்காலங்கள்
நெஞ்சுக்குள் குத்தவைத்துக்கொண்டு
குறிகேட்க ஆரம்பித்துவிடுகிறது
மீண்டும் எப்போது அவளிடம் பேசுவாய் என்று
காலையில் பரபரப்பாகி
மாலையில் ஓய்ந்துகிடக்கும்
கிராமத்து ஒத்தையடி பாதையாய் பரிதவிக்கிறது
நாள் தள்ளிக்கொண்டு போகும் இடைவெளியால்
அன்பே வா வா
அனுதினமும் இம்சை செய்
இப்போதும் அப்படித்தான் செய்யினும்
இன்னும்கூடுதலாய் இம்சை செய்யடி
உன் இம்சையே எனை இருக்கிப்போடட்டும்
இந்த ஜென்மம் முழுவதும்....  

No comments:

Post a Comment