Saturday 21 November 2015

நமத்துப்போன தீபாவளி


மத்தாப்பு கரு மருந்து வாசம் மாதிரி
நாசி கிழித்து இறங்கியது இன்று,
தீபவொளிக்கெல்லாம் வந்து 
கொண்டாட்டத்தை நனைக்கிற மழை 
நீர் மூழ்கிக் கிடக்கும் பயிர்களின் மேல் மிதக்கும் அப்பாக்களின் வேண்டுதல்கள்
சம்பாதிக்க நாலுதிசை சென்ற மக்கள் வீடு வந்தும்
மூத்தமகன் வரலையேனு ஏங்கும் அம்மா,
இப்படியாக பட்டணத்துத் தெருக்களில்
பழைய தீபவொளிக் கொண்டாட்ட நினைவுகளில் நனைகயில்
கண்களில் மெல்ல எட்டிப்பார்க்கிறது உப்புமழைத்துளி,
சம்பளம்போடாத முதலாளிக்கு எங்கத் தெரியப்போகிறது
எங்க சம்பளத்தையும் எதிர்பார்த்து ஆடைகள் ரசிக்கும் சிலகண்கள்,
பட்டாசு கொளுத்தும் சில கைகள்,
அரசு நிர்ணயித்த முந்நூற்றைம்பது கோடியில் பங்கெடுத்து
குடிகாக்கும் பெரிய சிறிய உறவுகள்,
வெளியாகும் படத்துக்குப்போய்
ரசிகர்களின் அலப்பறையில் பாதியிலயே பிடிக்காம வெளியேறும் சிநேகங்கள்,
பல ஊர்களிலிருந்து பொங்கலுக்குமுன் சந்திக்கிற சொந்தங்கள் இருக்கின்றன என்று.
இவ்வளவையும் சேர்த்து யோசித்தபொழுது
சிவகாசி பட்டாசுச் சத்தத்தைக் கேட்டு மிரண்டு
செவி வலி பொறாமல் பதுங்குமிடம்தேடி அலையும் நாயாய்
இந்த வருடத் தீபவொளிக் கவிதை. 

No comments:

Post a Comment