Saturday 21 November 2015

பாட்டுப்பழனி

இவன் பாட்டாளிகளின் பாட்டாளி
இவன் படைப்பாளிகளின் பங்காளி 
திரையில் இவன் பாட்டு சுரத்தோடு
தரையில் இவன் பாட்டு அறத்தோடு 
காதோடு கதை பேசும் வானொலி 
ஒவ்வொரு கவிதையிலும் காணொலி
மிச்சமில்லாமல் சொல்லும் தமிழ்ப்பிள்ளை
அச்சமில்லாமல் சொல்லும் ஈழத்துக்கணில்பிள்ளை
சொற்களுக்கு வலிக்காமல் பாலூட்டுவான்
தமிழ்த்தாயிக்கு பலிக்காமல் வாலாட்டுவான்
சொந்தங்களை மறப்பதில்லை இவன் வார்த்தை
நொந்தவர்களை அணைக்காமலில்லை இவன்வாழ்க்கை
புழுதிகளைப்பற்றியே பாடி அழகானவன்
பணத்தைபற்றியோ பழகானவன்(பழகான் அவன்)
பூக்கும் மலருக்கு வரலாறு நோக்கு படைத்தவன்
பாவலர் சிலருக்கு தகராறு மூக்கு உடைத்தவன்
இவன் வாழுகின்ற காலங்களில் தமிழின் முகத்தை
எவன் தாழுகின்ற வேளைகளில் கீறும் நகத்தை
வைக்க அனுமதியாதவன்-தமிழ்
தைக்க அறிவுமதியானவன்.
ஊருக்கு வேண்டுமானால் இவன்பாடலாசிரியர்-தமிழ்
தேருக்கு இவன்தான் வடமானவன்
காரணம் தடம் மாறாதவன்
என்றும் கவிதைத் தரமானவன்.
கவியரங்கில் சொற்களை நெருப்பாக்குவான்
தன்னையே தமிழுக்கு செருப்பாக்குவான்
பட்டிக்காட்டை மறக்காத பாட்டுப்பழனி நீ
விதைத்தால் ஏமாற்றாத கரிசக் காட்டுக்கழனி நீ
எம்கவித்தகப்பனுக்கு மூன்றாம் காலாய் இருந்தாய்
அவர் எழுத்துக்கு ஊன்று கோலாய் இருந்தாய்
அவரோடு நெருங்கிப் பழகா தோசத்தை -அவரின்அசலான
உன்னோடு நெருங்கி விலகா நேசத்தை பெறவேண்டும்
புது மழை போலில்லாமல்
நெடுமழையாய் நீ தரவேண்டும்.
அன்புத்தம்பி. வாஞ்சையுடன் -வாலிதாசன்.

No comments:

Post a Comment