Friday 20 November 2015

கவனத்தில் கொள்

கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல சிரிப்பு கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல வெடிச்சத்தம் கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல மக்கள் வெளியேறுவது.
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல உரிமை கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல அமைதிப் பேச்சுவார்த்தை பேசுவது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல அழுகுரல் கேட்பது
கவனத்தில் வைத்துக்கொள்
இம்மண்ணில்
இம்முறை மட்டுமல்ல மனிதநேயம் தோற்பது.
ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மண்ணிலும்
முதல் தடவைபோல கடந்துகொண்டிருக்கிறது
எண்ணற்ற காரியங்கள் பல.
-வாலிதாசன்.

No comments:

Post a Comment