Friday 20 November 2015

கனவு வியாபாரி

நிர்வாணம் பார்த்த 
நாலுபக்கச் சுவர்,
தலை திருகியதும் 
பக்கெட் நிரம்ப விழும் சத்தம்,
பொறுக்க முடியாமல் உமிழ்நீர்
ஒன்டும் ஈசானி மூலை,
கை அலம்ப கால் அலம்பென்று வாங்கி நிறைந்திருக்கும்
வாசனைப்பொருட்கள்,
எல்லாம் அடுக்கிய கழிவறைதான்
எத்தனையோ மவுனம் எழுதும்
அதிலொன்றாய் இதைவைத்துக்கொள்ளலாம்,
பக்கோடா விற்கிறான்
கருமுட்டை விற்கிறாள்
உடைமை விற்கிறான்
உடல் விற்கிறாள்
பட்டாம்பூச்சியை விற்கிறான்
பட்டாடை விற்கிறாள்
செவ்வந்தியை அன்பளிக்கிறான்
சாமந்தியை விற்றது போக மீதியை வீதியில் கொட்டுகிறாள்
ஒரு ரூபாயிக்கு வாங்கி
ஒன்பது ரூபாயிக்கு விற்கிறான் கவுரமாய்
கனவுகளை விற்பதில்
எனக்கொன்றும்
கவுரவக் குரைச்சல் இல்லை.
-வாலிதாசன். .

No comments:

Post a Comment