அம்மா
சொல்லும் பேய்க்கதைகளில்
அலறவைத்துவிடும்
நடுச் சாமங்களில்,
"அம்மா
அண்ணன் மோன்டுட்டான்
பாவாடையில
மூத்திற நாத்தமென்று"
காலை
எழுகையில்
தங்கச்சி
சத்தம்போட்டு கூப்பாடுபோடுவா
,
சும்மா
இருக்கமாட்டாள்
கேதாற
வீட்டுக்குப் போயிட்டு வந்த
அம்மா,
பிணமாகிப்போன
பக்கத்துத்தெரு
பெரியாத்தாவக்
கட்டிப் பிடித்து
மூக்குச்சளியை
முந்தானையில் நனைத்து
அழுதுவிட்டு
வந்த அன்றிரவு ,
உணவுண்ட
பின் நிலா முற்றக் கதையிலே
இறந்த
பெரியாத்தா நினைவைப்
பேசுறதக்
கேட்ட இரவு தினத்தில்
நனைய
ஆரம்பித்திடும் மூத்திர
இரவு,
அப்படி
பல நடக்கும் ,
இப்ப
கார்ட்டூனுக்குள் மையம்
கொள்கிறது
மழலை
இதயம்,
அம்மா
சேலை,
அப்பா
வேட்டி நனைத்து
காலையில்
திட்டிக்கொண்டே
கசக்கிய
காலம் பொற்காலம் தானே,
நனையா
பக்கங்கள்
நெஞ்சில்
ஏராளம்தானே எல்லோருக்கும்,
No comments:
Post a Comment