Thursday 13 June 2013

நனையாப் பக்கங்கள்


அம்மா சொல்லும் பேய்க்கதைகளில்
அலறவைத்துவிடும் நடுச் சாமங்களில்,
"அம்மா அண்ணன் மோன்டுட்டான்
பாவாடையில மூத்திற நாத்தமென்று"
காலை எழுகையில்
தங்கச்சி சத்தம்போட்டு கூப்பாடுபோடுவா ,
சும்மா இருக்கமாட்டாள்
 கேதாற வீட்டுக்குப் போயிட்டு வந்த அம்மா,
பிணமாகிப்போன பக்கத்துத்தெரு
பெரியாத்தாவக் கட்டிப் பிடித்து
மூக்குச்சளியை முந்தானையில் நனைத்து
அழுதுவிட்டு வந்த அன்றிரவு ,
உணவுண்ட பின் நிலா முற்றக் கதையிலே
இறந்த பெரியாத்தா நினைவைப்
பேசுறதக் கேட்ட இரவு தினத்தில்
நனைய ஆரம்பித்திடும் மூத்திர இரவு,
அப்படி பல நடக்கும் ,
இப்ப கார்ட்டூனுக்குள் மையம் கொள்கிறது
மழலை இதயம்,
அம்மா சேலை, அப்பா வேட்டி நனைத்து
காலையில் திட்டிக்கொண்டே
கசக்கிய காலம் பொற்காலம் தானே,
நனையா பக்கங்கள்
நெஞ்சில் ஏராளம்தானே எல்லோருக்கும்

No comments:

Post a Comment