சேதிகள்
உறவாடும் ராத்திரி
தோழிகளின்
பேச்சுகள் இடையே
அவரவர்
வருகைக் காரணம்
முணுமுணுத்தன
படிக்க
முடியாத நாக்குகள்-
அக்கா
கல்யாணத்தால்தான்
படிக்கமுடியாமல்போனது
ஒருதோழிபேச்சாய்-
திடிரென
அம்மா இறப்பு
படித்த
அக்கா வீட்டுக்குத் துணையாக
நிற்க
உடன்
எனது பள்ளிக் கால்களும் நின்றன
மற்றொரு
தோழி பெரு மூச்சாய்-
முட்டி
முட்டி படித்தேன்
மர
மண்டைக்கு ஒத்து வரலனு
சில
தோழிகள் சலிப்பாய்-
ஒவ்வொருவராக
சொல்லச் சொல்ல
கண்ணீரைக்
கக்கின
முகில்
கண்கள்-
சில
பள்ளிச் சீருடைகள் விம்மின
பஞ்சாலைத் தோழிகளின்
விடுதியில்,
விவரச்
சேதிகள் தொடர
நடுநிசிகடந்து
இருள ஆரம்பித்தன கண்கள்.
வெளிச்சம்
பெற அதிகாலை எழுந்து
தனக்கான
வாழ்வை தானமைக்க,
கவனிக்க முடியாத
நாற்றுகள்
கவனிக்கப் ப டாத
வேர்கள்
மண்குவிக்க
தயாராகின்றன.

No comments:
Post a Comment