Friday, 19 July 2013

கவிப்பேரரசு வைரமுத்து உடன்

                                 என்னை வசீகரிக்காத கவிஞரான வைரமுத்து அவர்கள் மீது இன்று அவரின் மாந்த நேயப் பண்பைக் கண்டு, அவரின் மீதான மதிப்பு உயர்ந்தது, எம் கவித்தகப்பன் வாலி அய்யா பூவுடல் ஊர்வலத்தில் பின் சென்றோம், புறப்பட்ட பின் எதிர்வயப்பட்ட திரு.வரைமுத்து அவர்கள் புறப்பட்ட வாகனத்தை நிறுத்தாது போகச் சொல்லிட்டு, கற்பகம் நிழற்சாலையில் வந்து செருகினார், அங்கிருந்து வருத்தத்தை நெஞ்சுக்குள் முடிச்சிட்டுக் கொண்டார் போல, எம் ஆர் சி நெடுஞ்சாலையில் வாகனம் கடக்க கடக்க அவிழத்துவங்கியது, கைக்குட்டை நனைத்துக் கொண்டது, சில சமயம் ஏக்கப் பெரு மூச்சொறிந்தார், நடந்து கொண்டே போகினோம், பாலம் கடந்த பின்னும் வானம் நோக்கி இட வலமாக திரும்பிப் பார்த்தபடியே நடக்கத் துவங்கினார்,எந்த எந்த இடமென்று பார்வைக் குறிப்பொடு தலையசைத்துக் கொண்டு, வாலித்தமிழ் இல்லத்தின் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மழையழத்துலங்கியது, வானத்தின் போதிநீர்த்திவலைகள் கவிஞர் வைரமுத்துவின் ஆடை துளைத்துக் கருத்த யாக்கை நனைக்க நனைக்க உதவியாளர்" அய்யா வாகனத்தில் ஏறளாமானு வினவினார்" வேண்டாமென்று பெருங்குணத்தால் நிராகரித்தார், மயானம் நெருங்க நெருங்க மிக உக்கிரமாக அழத்துலங்கியது கவிதை பிடித்த வானம், சாலையில் சாக்கடை யோடு நிரம்ப நீரில் கால் நனைத்து நடந்தேகினார் வீறு குன்றாது,பின்னால் சில அரசியல் சாக்கடைகள் வேட்டியைத் தூக்கிக் கொண்டன, அந்த இடம் கவிஞரின் ஆடைமீது கவனம் கொள்ளாது, ஒரு வாக்கியம் சொன்னார்"கவிஞர் முகத்தில் தூறல் விழாமல் பார்த்துக்கோங்கவென்று" மேலும் அழத்துவங்கினேன் மவுனம் உடைத்து, பெசண்ட் நகர் மின் மயானம் வந்தடைந்தது. கவிஞர் வைரமுத்து அவர்களின்இந்தக்குணம்எம்மை அவர்மீது உயர்வான மரியாதைச் செலுத்த வைத்துவிட்டது.
மகோரா (எம்.ஜி.ஆர்) இறுதி ஊர்வலத்தில் இப்படி நெடுந்தூரம் கவியரசு கண்ணதாசன் நடந்ததாக கேள்வி, இன்று கவிதை வங்கி வாலிக்கு கவிப்பேரரசு வைரமுத்து,
கவியரசு கண்ணதாசனைப் பார்க்கப் போயிட்டார் திரைப்பாட்டு மார்க்கண்டேயர் வாலி அய்யா,  

No comments:

Post a Comment