Saturday, 28 September 2013

என்னாச்சு இவளுக்கு


உன்னிடம்
மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
பதில் மொழிகள் கடலலையாய் மோதுகிறது
என் நெஞ்சில்,
உன் வீட்டில் சிறு சண்டையென்றால்
எனக்கு மிஸ் கால் கொடுத்து,
உன்னைப் பிடிக்கவில்லை
உன் முகம் பிடிக்கவில்லை
உன் குறுந்தகவல் பிடிக்கவில்லை
உன் செல்நம்பர் பிடிக்கவில்லை
உலகத்தில் எதுவுமே பிடிக்கவில்லை
சிறு நிமிடம் கூட தாமதிக்காமல்
சட்டென்று சொல்லிவிடுகிறாய்,
என்னாச்சு இவளுக்கென
ஏங்கிக் குதிக்கிறது விழியிலிருந்து கண்ணீர்
உனக்காக சேமித்து வைத்த ப்ரியங்கள் எல்லாவற்றையும்
நினைத்து நினைத்து.

No comments:

Post a Comment