திண்டிவனம் வீரமுத்து கோனார் மகள் நீ
இராமநாதபுரம் செல்லையா உழவர் மகன் நான்
அதிகாலை எழுந்ததும்
சாணி கரைத்துத்தான்
முற்றம் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்
உங்க அம்மாவும்
எங்க அம்மாவும் அன்றிலிருந்து இன்றுவரை,
பேத்திகளுக்காகவே காது வளர்த்த பாட்டிகள்
உங்க வீட்டோடு ஒண்ணு
எங்க வீட்டோடு ஒண்ணு.
உங்க வீட்டு செம்மறி ஆடும் ஒரு குட்டி போட்டுள்ளது
எங்கவீட்டு பசுமாடும்ஒரு கன்று போட்டுள்ளது போன மாசம்
எல்லாத்தையும் விட
நீயும் பனிரெண்டாம் வகுப்பு கணிதப்பிரிவு
நானும் பனிரெண்டாம் வகுப்பில் கணிதப்பிரிவு,
ரெண்டே ரெண்டு முறைதான் சந்திச்சிருக்கோம்
டி.என்.பி.எஸ்.சி க்கு விண்ணப்பிக்கும் போது
பாரிஸ் தபால் நிலையத்தில் மட்டும்,
நீ யாரோ
நான் யாரோ
எப்பிடியினும் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே
பேஸ்புக் யூசர்நேம் பாஸ்வேர்டு போல
இராமநாதபுரம் செல்லையா உழவர் மகன் நான்
அதிகாலை எழுந்ததும்
சாணி கரைத்துத்தான்
முற்றம் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்
உங்க அம்மாவும்
எங்க அம்மாவும் அன்றிலிருந்து இன்றுவரை,
பேத்திகளுக்காகவே காது வளர்த்த பாட்டிகள்
உங்க வீட்டோடு ஒண்ணு
எங்க வீட்டோடு ஒண்ணு.
உங்க வீட்டு செம்மறி ஆடும் ஒரு குட்டி போட்டுள்ளது
எங்கவீட்டு பசுமாடும்ஒரு கன்று போட்டுள்ளது போன மாசம்
எல்லாத்தையும் விட
நீயும் பனிரெண்டாம் வகுப்பு கணிதப்பிரிவு
நானும் பனிரெண்டாம் வகுப்பில் கணிதப்பிரிவு,
ரெண்டே ரெண்டு முறைதான் சந்திச்சிருக்கோம்
டி.என்.பி.எஸ்.சி க்கு விண்ணப்பிக்கும் போது
பாரிஸ் தபால் நிலையத்தில் மட்டும்,
நீ யாரோ
நான் யாரோ
எப்பிடியினும் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே
பேஸ்புக் யூசர்நேம் பாஸ்வேர்டு போல

No comments:
Post a Comment