அக்கறைக் கவனங்கள்
மதுக் கடைப் பாரில்
குடிக்கிற பேச்சுகள்,
திறந்து வைத்த புட்டிகளாய்
குறைகின்றன
மனைவிமார்களின் மீது கொண்ட
பாசங்கள்,
ஒருவர் பேச்சை
ஒருவரும் கேட்பதில்லை
தள்ளாடிப்போன அவரவர் அக்கறைக் கவனங்கள்,
சரக்கூத்தாத நெகிழி குவளையைப் போல
காற்றிலாடும் குடும்பக் கதை.
No comments:
Post a Comment