அத்தி மரத்துக்காக
ஆலமரம் கொடிக்கம்பம் ஏற்றாது,
இலவச வீடுகட்ட
நத்தைக்கூடுகள்
இணாம் கேட்காது,
பங்கு போடாது
ஒப்பந்தகாரஅணில்,
ரேஷன்கடைப்பொருள்களை
வண்டிகளில் கடத்துவதில்லை
சர்க்கார் எறும்பு,
அழகுநிலைய வாசலில்
பார்க்க முடியாது
குட்டைமயில்களை,
அடிபட்டவனை கணாதது போல
அலுவல் நேரமாயிற்று என்று
விட்டுச்செல்லாது
நேயப்பட்சிகள்,
எதற்கெடுத்தாலும்
கடிதமெழுதி கடிதமெழுதி
காத்திருக்காது
சொந்த சனங்களைக்காக்கும் புலி,
புழுகு வாக்குறுதி தந்து
மெழுகாட்சி நடத்தாது,
கவ்வும் உடும்பு,
செய்வதை செஞ்சிட்டு
எனக்குத்தெரியாமல்
நடந்திருக்குனு நாடகமாடாது
நல்லபாம்பு,
பந்தலிட்டு
தோரணம்கட்டி
சுவரெங்கும் விளம்பர உச்சா போயி,
விழாமேடையில்
ஆபாச நடனம் பார்க்காது கழுதை.
அதிகாரச் சாக்கடைக்கு
கலவரத்தை உண்டாக்கி
குடிசைகளை கொளுத்திக் கொள்வதில்லை
சாதி எருமை
சாதி பண்றி,
கருநாகக் கைதுகளுக்கு
கவர்மெண்ட் பொருளைச் சேதமாக்காது
நாகப்படை,
ஆண்டபரம்பரை
அடிமைபரம்பரையினு
பேசி வெட்டிக்கொல்வதில்லை
சிட்டுக்குருவி,
சாதிச்சான்றிதழ் கொடுப்பதில்லை
கம்பெடுத்தான் பள்ளிக்குப் போகும்
ஆடு,
வெள்ளைப்பாலுக்கு
சிலை நூறுகோடி சொல்லிட்டு
வெள்ளைக்காரனுக்கு
பால்விற்பனைனு பேசாது தாய்ப்பசு,
எதிர்த்து பேசுற
ஆள்களோட ஆளை
விலைபேசி இழுக்காது
கழுகு.
No comments:
Post a Comment