ஊரோரமா
ஒதுங்கி நிற்கும்
வேப்ப மர
பேருந்து நிறுத்தத்தில்
மத்தியான குளுமை,
தலைசாய்த்த களைப்பில்,
உறக்கம் எழுப்பி,
காற்றடித்த
திசை கடத்தி வரும்
வாகனச் சத்த வேகத்தோடு ஏறி விளையாடும் ஜீவாக்குட்டி,
முகத்தில் தட்டி தட்டி
அப்பா ஊர் ஊர்னு ஊர ஆரம்பித்தாள்,
ஊர் சுத்தி பஸ் கண்டு,
நெடு நெடுன்னு
விலகிச்செல்லும் ஆசை
தணியாக பயணித்து,
பாதியோடு படிப்பு நின்று
வெளியூர் வாக்கப்பட்டுப்போன
பள்ளித்தோழி பையனோடு இறங்கி,
விட்டுச்சென்ற நினைவைத் தேடி
நிழலாட வந்தது,
தயங்கிய முன்னையப் பழக்கம்,
அவள் மகனிடம்
தம்பி உன்பேரென்ன,
பாரதின்கிற பெயரை
பாதியாக்கி சொல்ல,
அப்பா பேரு தொடங்கி
அம்மா பேரு சொல்லும் போது,
துள்ளிக் குதித்தாள்,
என்பேரு அவுங்க அம்மாவுக்குனு ஜீவாக்குட்டி,
சிருமலோடு
நகர மறுத்த
எச்சக் கால வாழ்க்கையின்
சிறகுகள் வருடின
பள்ளியில் பகிர்ந்த பரிசங்கள்,
குழந்தைகளுக்கு
பெயர் சூட்டுதலில் வாழ்கிறது
தீராத பிரியம்,
ஒதுங்கி நிற்கும்
வேப்ப மர
பேருந்து நிறுத்தத்தில்
மத்தியான குளுமை,
தலைசாய்த்த களைப்பில்,
உறக்கம் எழுப்பி,
காற்றடித்த
திசை கடத்தி வரும்
வாகனச் சத்த வேகத்தோடு ஏறி விளையாடும் ஜீவாக்குட்டி,
முகத்தில் தட்டி தட்டி
அப்பா ஊர் ஊர்னு ஊர ஆரம்பித்தாள்,
ஊர் சுத்தி பஸ் கண்டு,
நெடு நெடுன்னு
விலகிச்செல்லும் ஆசை
தணியாக பயணித்து,
பாதியோடு படிப்பு நின்று
வெளியூர் வாக்கப்பட்டுப்போன
பள்ளித்தோழி பையனோடு இறங்கி,
விட்டுச்சென்ற நினைவைத் தேடி
நிழலாட வந்தது,
தயங்கிய முன்னையப் பழக்கம்,
அவள் மகனிடம்
தம்பி உன்பேரென்ன,
பாரதின்கிற பெயரை
பாதியாக்கி சொல்ல,
அப்பா பேரு தொடங்கி
அம்மா பேரு சொல்லும் போது,
துள்ளிக் குதித்தாள்,
என்பேரு அவுங்க அம்மாவுக்குனு ஜீவாக்குட்டி,
சிருமலோடு
நகர மறுத்த
எச்சக் கால வாழ்க்கையின்
சிறகுகள் வருடின
பள்ளியில் பகிர்ந்த பரிசங்கள்,
குழந்தைகளுக்கு
பெயர் சூட்டுதலில் வாழ்கிறது
தீராத பிரியம்,

No comments:
Post a Comment