உரைகளற்ற மவுனம் வியாபிக்கும் குளம்
காலில் மெல்ல மெல்ல
அலை தழுவி தழுவி செல்லும் பிரியம்
இருக்கும் மூன்று வேட்டி
ஒரு பனியன் துவைக்க
ரெண்டு கத தூரம்வரவேண்டியிருக்கென
மனசுக்குள் பேசிய படியே
ஓங்கி ஓங்கி
துவைகல்லில் விழுகிறது சப்தம்
அரைநிர்வாணத்தோடு
மடித்துக்கட்டிய கைலி முடிச்சு அவிழாமல்
தெரு வழியாக வீடடைந்து
அலசிய துணிகள கொடியில் வைத்து
ஒவ்வொன்னா விரிக்க எத்தனிக்கயில்
பொத்தென்று புழுதியில் விழுந்த வேட்டியெடுத்து
உதறுகையில் அடச்சே என்ற சொல்லில்
உலக இன்பமே
ஒரு கணம் இருளாகித்தான் போகிறது
No comments:
Post a Comment