காத்திருத்தலின்
கவனம் கொஞ்சம் கொஞ்சமாக
கரைகிறது
நீண்ட நெடிய
பொழுது கடந்தும் வராத
உன் பதிலை
உண்டும் செறிக்காத
உணவாகி குமட்டலோடு
துப்புகிறேன்
அரட்டையில்
உன்னோடு செலவழித்த நேரத்தை,
மயக்க மாகிப்போன நிலையில்
கையில் மாத்திரையோடு வரும்
கில்லாடி மருத்துவச்சிடி நீ,
மனசுக்கு லேகியம் கொடுக்கும் வித்தையெல்லாம்
கத்தவளாய் இருக்கும் உன்னைத்தான்
அம்மா சொல்வாள் அடிக்கடி
பாவம்டா அவள்
உன்னைத்தவிர
வேற எதுவும் தெரியாத பச்ச மண்ணு என்று,
புயலின் மவுனங்களா
தென்றலை தீண்டும்?
தென்றலின் மவுனம்தான்
புயலைத்தீண்டுமா?
வலைதளக்காதலில் வளைந்துபோகிற
சுயமரியாதையற்ற காதலின் எதிர்பார்ப்பும்
மழுங்கிப்போய்
ஏமாற்றமும் மிஞ்சிப்போய்
நிலைத்தகவலில் மட்டும் பதிவாகிப்போகிற காதலாகிடாது
பார்ப்பவள்தானடி நீ
பாசாங்குக்காரி......
புதுசா அம்மாவுக்குஎடுத்த சேலை
முந்தானை வாசனை விட
அடுப்படி அழுக்கில் தோய்ந்த
முந்தானை வாசம் பிடித்திருக்கிறது
உன்னைப்போல காதலிக்க....

No comments:
Post a Comment