ஊரைவிட்டு
ஓடி வந்து
குறைஞ்சது முப்பது வருஷமாகும்
பட்டணத்திலே
கல்யாணமும் பண்ணி
குழந்தையும் பெற்றாயிற்று
குறைஞ்ச சம்பளத்தில் தொடங்கி
கை நிறைய சம்பாதித்து
ஆங்கிலோ இண்டியன் பள்ளியில்
படிக்கிறது குழந்தைகள் ரெண்டும்
ஊர் பக்கமே போகக்கூடாதுன்னு
வைராக்கியம் மட்டும்
வளைத்து போட்டு விட்டது
பட்டணத்தில்.
இன்னும் கொஞ்ச நேரத்தில்
ப்ள்ளி முடிந்து வரும்
குழந்தைகளுக்காக வாசலில்
பைக்கோடு வெளியே நிற்கிற போது
சாலையில்,
ஏரு பூட்டி உழுகும் அப்பாவும்,
உரல் குத்தும் அம்மாவும்,
கோலம் போடும் தங்கையும்
அவ்வப்போது ஞாபகத்தில் வரும்,
பைக்கிலேறிக் கொண்டு
போகலாம் அப்பா வீட்டுக்குன்னு
பிள்ளைகள் சொல்கையில்
ஹெல்மட்டுக்குள் கண்ணீரோடி
மீசை நனைத்து நிற்கும்,
உப்புக்கரித்தது
இவ்வளவு காலம் வாழ்ந்த
அந்த வாழ்க்கை.
-நன்றி:கணையாழி-
மே-2012
ஓடி வந்து
குறைஞ்சது முப்பது வருஷமாகும்
பட்டணத்திலே
கல்யாணமும் பண்ணி
குழந்தையும் பெற்றாயிற்று
குறைஞ்ச சம்பளத்தில் தொடங்கி
கை நிறைய சம்பாதித்து
ஆங்கிலோ இண்டியன் பள்ளியில்
படிக்கிறது குழந்தைகள் ரெண்டும்
ஊர் பக்கமே போகக்கூடாதுன்னு
வைராக்கியம் மட்டும்
வளைத்து போட்டு விட்டது
பட்டணத்தில்.
இன்னும் கொஞ்ச நேரத்தில்
ப்ள்ளி முடிந்து வரும்
குழந்தைகளுக்காக வாசலில்
பைக்கோடு வெளியே நிற்கிற போது
சாலையில்,
ஏரு பூட்டி உழுகும் அப்பாவும்,
உரல் குத்தும் அம்மாவும்,
கோலம் போடும் தங்கையும்
அவ்வப்போது ஞாபகத்தில் வரும்,
பைக்கிலேறிக் கொண்டு
போகலாம் அப்பா வீட்டுக்குன்னு
பிள்ளைகள் சொல்கையில்
ஹெல்மட்டுக்குள் கண்ணீரோடி
மீசை நனைத்து நிற்கும்,
உப்புக்கரித்தது
இவ்வளவு காலம் வாழ்ந்த
அந்த வாழ்க்கை.
-நன்றி:கணையாழி-
மே-2012
No comments:
Post a Comment