நகைக்கடை ஊழியர் கவலை
அட்சய திருதியில்
பெண் குழந்தை பிறப்பு
அனல் வெயில்
இளைப்பாறும் நிலம்
வயலெங்கும் கருவ மரம்
செதுக்கப்படுகின்றன
மண் சுமந்த மரத்தில்
சிலுவை
வேடன் எறிந்த கல்
போய் விழுந்தது காட்டுக்குள்
காயத்துடன் பறவை.
உண்டியலில் காணிக்கை
புன்னகை பூத்தார்
உலாவந்த கடவுள்.
மல்லாந்து படுக்கும்
வார்த்தைகள் ஏராளம்
தலைப்புகளில் கவிதை
அகத்தினழகு முகத்தில்
சுவற்றுக்குள்
பெய்தமழை நீர்.
-புதுவை கவிதை வானில்-
சூன்-2011
அட்சய திருதியில்
பெண் குழந்தை பிறப்பு
அனல் வெயில்
இளைப்பாறும் நிலம்
வயலெங்கும் கருவ மரம்
செதுக்கப்படுகின்றன
மண் சுமந்த மரத்தில்
சிலுவை
வேடன் எறிந்த கல்
போய் விழுந்தது காட்டுக்குள்
காயத்துடன் பறவை.
உண்டியலில் காணிக்கை
புன்னகை பூத்தார்
உலாவந்த கடவுள்.
மல்லாந்து படுக்கும்
வார்த்தைகள் ஏராளம்
தலைப்புகளில் கவிதை
அகத்தினழகு முகத்தில்
சுவற்றுக்குள்
பெய்தமழை நீர்.
-புதுவை கவிதை வானில்-
சூன்-2011

No comments:
Post a Comment