சில காலம்
நிலவரங்களைத்தேடி
அலையும்
அந்தக் காடு
அமைதியின் மூர்க்கத்தை
அடக்கி-
பிடரி மயிற்றை இழுத்து
பின்னங்கால் தெரிக்க
சுற்றுகின்றன-
அவசரத்தின் படபடப்புகள்
மட்டும்.
நெஞ்சின் தீராத பக்கமெங்கும்
தேடித் தேடியே கனக்கிறது-
அது
சந்தன லாரிகளும்
காக்கி சாக்சுகளும் இளைப்பாற
நிலவரங்களைத் தேடி
அலையும் அந்தக் காடு.
சோகத்தின் அனலை
வீசிய படியே-
பேசிக் கொண்டிருக்கும்
காட்டின் எண்ண்ம் எதுவாக இருக்கும்?
வெடிச் சத்தம் கேட்டு
வெல வெலத்துப் போன வனதேவதை
வாய்தாவில் கூட
வெளி வரமுடியாது-
மிருக மனிதர்களின்
துப்பாக்கி ஏந்திய பார்வையொடு
நீள்கிறது-
சில காலம்
மீசை முறுக்கிய
அந்தக் காடு.
-நன்றி:ஆனந்தவிகடன்
17-08-2011
நிலவரங்களைத்தேடி
அலையும்
அந்தக் காடு
அமைதியின் மூர்க்கத்தை
அடக்கி-
பிடரி மயிற்றை இழுத்து
பின்னங்கால் தெரிக்க
சுற்றுகின்றன-
அவசரத்தின் படபடப்புகள்
மட்டும்.
நெஞ்சின் தீராத பக்கமெங்கும்
தேடித் தேடியே கனக்கிறது-
அது
சந்தன லாரிகளும்
காக்கி சாக்சுகளும் இளைப்பாற
நிலவரங்களைத் தேடி
அலையும் அந்தக் காடு.
சோகத்தின் அனலை
வீசிய படியே-
பேசிக் கொண்டிருக்கும்
காட்டின் எண்ண்ம் எதுவாக இருக்கும்?
வெடிச் சத்தம் கேட்டு
வெல வெலத்துப் போன வனதேவதை
வாய்தாவில் கூட
வெளி வரமுடியாது-
மிருக மனிதர்களின்
துப்பாக்கி ஏந்திய பார்வையொடு
நீள்கிறது-
சில காலம்
மீசை முறுக்கிய
அந்தக் காடு.
-நன்றி:ஆனந்தவிகடன்
17-08-2011
No comments:
Post a Comment