Thursday 13 June 2013

பஞ்சாயத்து ஞாபகம்


கோவம்கோவமா வருது
ஊரணிக்கரை மீது,
கண்கொட்டாமல்
நேரே நின்று பார்க்கிறது
நீராடும் அவள் அழகை,
மறைந்திருந்துப் பார்த்த என்னைத்தான் ஏசி
பஞ்சாயத்தைக்கூட்டி அவமானப்படுத்துகிறாய்
ஓர வஞ்சனைக்காரி,
மறக்கவே இல்லை
இன்னும்
அவளும் நானும்,
சிறுசிறு ஊடலின் போது
பேசா நொடிப்பொழுதுகளில்
சொல்லிச் சொல்லி
மீண்டும் மீண்டும்
புதுவாழ்க்கைக்கு அழைத்துச்செல்கிறது
அவமானப்படுத்திய அவளின் பஞ்சாயத்து ஞாபகம்.......

No comments:

Post a Comment