வாசலுக்கு வந்து கிடந்தன
வயிறு
மெலிந்த
சமையல்
பாத்திரங்கள்
அடகு
வைத்தவை போக-
பூட்டப்படாத
வீடு
கழற்றி
வீசப்பட்டுக் கிடந்தது
மானத்தை
இழந்த வாசல்,
பாத்திரம்
தேய்க்கப் போன
தங்கச்சித்
துணிமணிகள்
கொம்பின்றிக்
கொடி பிடித்தன
வீட்டு
முற்றத்தில்-
மூலையில்
ஒதுங்கி இருந்தது
அதட்டலுக்கு
அக்காவின்
பயம்,
தாய்
கோபித்துக்கொண்டுபோனதை
பக்கத்துத்
தெருவிலிருந்து
பாட்டி
சத்தம்
அசிங்க
அசிங்கமா சொன்னது,
எட்டி
உதஞ்ச தண்ணீர்க் குடமோ?
ஏனோ
தானமாய்.
கைலி
அவிழ்ந்து கிடந்த
தந்தை
அருகில்
மதுப்பாட்டில்
உசாரற்று-
முதுகில்
புத்தகப் பாரத்தோடு
பார்க்கும்
போது
நினைவு
வந்தது
ஜோதி
டீச்சரின் வீட்டுப்பாடம்.
No comments:
Post a Comment