காலில் விழுந்து
கை பிடிச்சு
வாசக் காத்து
காத்துக்கிடந்து
கார் கதவு திறந்து
பொண்டாட்டி நாப்கின் முதல் சகலமும் வாங்கி
விழாக்களுக்கெல்லாம் பொக்கை தூக்கி
சிங்கிள் டீக்கு அல்லோலப்பட்டு
எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாய் இழந்து
கிடச்ச முதல் பட வாய்ப்பில் பாட்டெழுதி
ஊருக்கெல்லாம் போன் செய்து
வெளிவராமலயே பொட்டிக்குள் அடைக்காக்கிறதன
உணர்ச்சிகளற்று திரை விலகாத ஏக்கங்கள் நிறைய,
சக்கையைப்போல உலவ
சமாதனத்துக்குள் புகழ
சங்கீதத்தில் சுருள சிரிப்பதே விலக பீடிக்கு பிச்சை லேடிக்கு சொச்சம் நிறைந்து வாழ்கிற தெருக்களில் விளம்பரச் சுவரொட்டிகண்டு தெருவில் சொல்லிச்சொல்கிறான் ஒருவன் "இந்தப்படத்தில் பாட்டெழுதியவன் தன்மானக்கவிஞன் என்று" என்னைப்பார்த்து சிரித்து அவர்களைக்கடந்து முன்னே செல்கிறது கடந்தகால என் ஆதிவாழ்க்கை. -வாலிதாசன்.
சங்கீதத்தில் சுருள சிரிப்பதே விலக பீடிக்கு பிச்சை லேடிக்கு சொச்சம் நிறைந்து வாழ்கிற தெருக்களில் விளம்பரச் சுவரொட்டிகண்டு தெருவில் சொல்லிச்சொல்கிறான் ஒருவன் "இந்தப்படத்தில் பாட்டெழுதியவன் தன்மானக்கவிஞன் என்று" என்னைப்பார்த்து சிரித்து அவர்களைக்கடந்து முன்னே செல்கிறது கடந்தகால என் ஆதிவாழ்க்கை. -வாலிதாசன்.
No comments:
Post a Comment