Sunday 1 November 2015

சில சில

சில சம்மதங்கள்
அடமானம் வைக்கப்பட்டுள்ளன,
சில சமத்துவங்கள்
கடனில் கிடக்கின்றன
சில நீதிகள்
வாய்தாவில் சென்றுள்ளன
சில பிரியங்கள்
காணாமற் தொலைந்துவிட்டன
சில நாகரிகங்கள்
கிழித்துக் கொண்டு அலைகின்றன
சில போதனைகள்
சீரழிந்து விட்டன
சில வேதனைகள்
சீரழித்து விட்டன
சில ஆட்சிகள்
பேயாள்கின்றன
சில ஆட்சிகள்
சாத்தான் வேதம் ஓதுகின்றன,
சில சங்கதிகள்
உண்மைக்கு காத்திருக்கின்றன
சில வார்த்தைகள்
தேசத்துரோகத்தில் கைது செய்யப்படுகின்றன
சில எழுத்துகள்
வெட்டிக்கொலைக்குள்ளாகுகின்றன
சில மழைகள்
ஒன்னு சொல்வது போல் வந்துவிடுவதில்லை
எல்லா நேரத்திலும் ஒன்றாக கவிதை.
-வாலிதாசன்.

No comments:

Post a Comment