Friday, 20 November 2015

தொட்டில் பழக்கம்

புலித்தோலின் மீது உட்கார்ந்தபடி
விளம்பரப்பலகைகளில் சிரித்தவாறு 
கையை விரித்தவாறுமாக
ருத்ராட்ச மாலைகளில் தங்கம் மறைந்து 
ருத்ராட்ச மாலையே தங்கமாய் அருள்பாலித்தபடி
மகள் வரைந்து தாளைக் காட்டி சொல்கிறாள்
அவர் துறவியாம் 

நாமும் பார்த்து பழகிவிட்டோம்.
-வாலிதாசன்.

No comments:

Post a Comment